Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனை சேர்ந்த ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை: அதிபர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:20 IST)
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என அந்நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது என்பதும் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்தநிலையில் உக்ரைன் நாட்டு ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டு ஆண்கள் எல்லோரும் போருக்கு தயாராக வேண்டும் என்றும் போருக்கு தயார் என்று கூறும் கூறி யார் வந்தாலும் அவர்களுக்கு ஆயுதம் வழங்க படும் என்றும் உக்ரைன் அதிபர் கூறியிருந்தார்.
 
 இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 18 முதல் 60 வயது வரை ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என அந்நாட்டின் அதிபர் திடீர் என உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
தலைநகர் கீவ் நகரில் உள்ள மக்களுக்கு பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments