Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு மற்றும் மாட்டிறைச்சியில் ரூபாய் நோட்டு தயாரிப்பு: பிரிட்டன் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (10:46 IST)
பிரிட்டன் நாட்டில் காகிதத்தில் அச்சடிக்கப்படும் பவுண்டு நோட்டுகளை ஒழித்துவிட்டு, பிளாஸ்டிக் கலந்த பாலிமர் நோட்டுகளை மக்களிடையே புழக்கத்தில்விட அந்நாட்டின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தீர்மானித்தது.


 
 
இதன் முதல்கட்டமாக, ஐந்து பவுண்டுகள் முகமதிப்பு கொண்ட புதிய பாலிமர் நோட்டுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளுடன் ஆடு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பால் உருவாகப்பட்ட ‘டால்லோ’ என்ற பொருள்.
 
இதற்கு அந்நாட்டில் வாழும் இந்து மக்கள் மற்றும் அசைவத்தை துறந்து, சைவ உணவை விரும்பி சாப்பிடும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
சர்ச்சைக்குரிய இந்த நோட்டுகளை இங்கிலாந்து மத்திய வங்கி திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால், காகிதத்தில் அச்சடிக்கப்படும் நோட்டுகளின் ஆயுட்காலம் இரண்டாண்டுகளாக இருக்கும் நிலையில், புதிய பாலிமர் நோட்டுகளின் ஆயுட்காலம் சுமார் ஐந்தாண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசு முன்வரவில்லை என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments