Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற 11 இந்தியர்கள் கைது

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (11:43 IST)
ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற 11 இந்தியர்களை ஐக்கிய அரபு அமிரீக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமிரகத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தொழிலாளியாகவும், அதிகாரிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.அவ்வாறு பணிபுரியும் இந்தியர்களில் 11 பேர் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.இயக்கத்தில் சேர முயன்ற குற்றத்திற்காக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாகவும், பண உதவி அளித்ததாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமிரக பாதுகாப்பு அமைப்பு தகவலின் படி மேற்கண்ட 11 பேரும் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments