Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேரத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்: ஜப்பானில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (08:25 IST)
நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகம் இருக்கும் ஜப்பானில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.

ஜப்பானில் இன்று காலை 6.30 மணிக்கு ஒரு நிலநடுக்கமும், சரியாக ஒரு மணி நேரம் கழித்து அதாவது காலை 7.30 மணிக்கு இன்னொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கியூஸு என்ற தீவில் உள்ள மியாசாகி நகரத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் கடலுக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 5.6 ரிக்டர் , 6.3 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments