Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டமடைந்த டுவிட்டர்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (07:37 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் டுவிட்டர் கணக்கு சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பதும் அதன் பின்னர் நிரந்தரமாக அவருடைய கணக்கு நீக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
அமெரிக்க தேர்தல் குறித்து தவறான மற்றும் வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவு செய்து வந்ததால் அவருடைய கணக்கில் நீக்கப்பட்டது என்று டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் டுவிட்டர் கணக்கை நீக்கியதால் டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் 40,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டிரம்ப் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதால் அந்நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அந்நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது
 
இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்னர் டுவிட்டரின் பங்குகள் மீண்டும் விலை ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபரின் கணக்கை நீக்கியதால் சுமார் 40,000 கோடி நஷ்டம் அடைந்த ட்விட்டர் நிறுவனம் குறித்த தகவல் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments