Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் சி.இ.ஓ வின் டிவிட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி??

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:23 IST)
டிவிட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது எப்படி என தெரிய வந்துள்ளது.

டிவிட்டர் செயலி உலகம் முழுவதும் உள்ள பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் டிவிட்டரின் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் டிவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவ்வாறு ஹேக் செய்யப்பபட்ட அவரது கணக்கில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் பகிரப்பட்டன.

இது குறித்து டிவிட்டர் நிறுவனம் கூறுகையில், ஜானின் டிவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்ட ஜானின் செல்ஃபோனே ஹேக் செய்யப்பட்டதற்கான காரணம் என கூறியுள்ளது. அதாவது கிளவுட் ஹோப்பர் வழியாக அவரது கணக்கில் மர்ம நபர்கள் ஊடுறுவியுள்ளனர் என கூறப்படுகிறது. முதலில் ஜாக் டோர்சேவின் செல்ஃபோன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின் எஸ்.எம்.எஸ் மூலம் டிவிட் பதிவாகும்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மர்ம நபர்களால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பின்னர் தானாகவே அழிந்தது.

ஜானின் டிவிட்டர் கணக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது என டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. டிவிட்டரின் சி.இ.ஓ. வின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டிருப்பது டிவிட்டர் பயனாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments