Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக்கை வாங்க பேரம் பேசி வரும் டுவிட்டர்: பரபரப்பு தகவல்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (07:23 IST)
டிக்டாக்கை வாங்க பேரம் பேசி வரும் டுவிட்டர்:
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யாவிட்டால் 15 நாட்களில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்பட ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டத்தட்ட பேச்சு வார்த்தை முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிக் டாக் செயலியை வாங்க டுவிட்டர் நிறுவனம் போட்டியில் குதித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் டிக் டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு நிறுவனங்களும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி வேறு சில அமெரிக்க நிறுவனங்களும் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டிக் டாக் செயலியை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிப்பதால் அதன் விலையும் அதிகரித்து வருவதாகவும் மிக விரைவில் டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் டுவிட்டர் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments