Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவு.. ராஜினாமா செய்யும் ராணுவ அதிகாரிகள்.. பெரும் பரபரப்பு..!

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (14:30 IST)
பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின், திடீரென பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைவராகி இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, அவரது குடும்பம் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள், 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ராணுவ வீரர்களுக்கு அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம், அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments