Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை

Webdunia
சனி, 25 ஜூலை 2015 (04:02 IST)
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தின.
 

 
ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான நடவடிக்கையில் பங்கு கொள்ளுமாறு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் வலியுறுத்திய போதிலும், அதை துருக்கி ஏற்றுக் கொள்ளவில்லை.
 
துருக்கி - சிரியா எல்லையில் துருக்கி ராணுவ நிலை மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
 
இதற்குப் பதிலடி கொடுக்க துருக்கி முடிவு செய்தது. இதனையடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. தற்போது முதல் முறையாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
 
மேலும், துருக்கி நாட்டில் 13 மாகாணங்களில் பதுங்கி இருந்த 251 ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த வாரத்தில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments