Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை
, சனி, 25 ஜூலை 2015 (04:02 IST)
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தின.
 

 
ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான நடவடிக்கையில் பங்கு கொள்ளுமாறு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் வலியுறுத்திய போதிலும், அதை துருக்கி ஏற்றுக் கொள்ளவில்லை.
 
துருக்கி - சிரியா எல்லையில் துருக்கி ராணுவ நிலை மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
 
இதற்குப் பதிலடி கொடுக்க துருக்கி முடிவு செய்தது. இதனையடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. தற்போது முதல் முறையாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
 
மேலும், துருக்கி நாட்டில் 13 மாகாணங்களில் பதுங்கி இருந்த 251 ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த வாரத்தில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil