Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தால் 10 மீட்டர் நகர்ந்த துருக்கி; புவியியல் ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:12 IST)
நிலநடுக்கம் காரணமாக துருக்கி நாடே ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் 17,000 அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீட்பு படையினர் 24 மணி நேரமும் மீட்பு பணியை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நிலப்பரப்புக்கு கீழே உள்ள ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்து உள்ளதாகவும் இதனால் துருக்கி நாடு ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 
 
4 தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்துள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நிலநடுக்கம் காரணமாக துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments