Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரிகளை ஏற்றி அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த துருக்கி

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:49 IST)
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கி அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது. 
அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர், துருக்கியில் உளவு வேலை பார்த்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தது துருக்கி அரசு. ஆண்ட்ரூவை நாடு கடத்தக் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது துருக்கி அரசு.
 
எனவே துருக்கி அரசிற்கு பதிலடி கொடுக்க, அமெரிக்க அரசு, துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியம் மீது 2 மடங்கு வரி விதித்தது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சரிந்தது
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கி அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments