Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுபிக் கடலில் நிலநடுக்கம் – சுனாமிக்கு வாய்ப்பு!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (08:02 IST)
பசுபிக் கடலின் தெற்குப் பகுதியான நியு காலிடோனியாவில் கடலுக்கு ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவு என்பது மிகெப்பெரிய நிலநடுக்கம் ஆகும். இவ்வளவுப் பெரிய  பூகம்பம் கடலுக்கு அடியில் ஆழம் குறைவாக 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிலநடுக்கம் வந்த அருகாமையில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு 150 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்க மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த மையத்தை சுற்றி 1000 கி.மீ ட்சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமிப் பேரலைகள் எழும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி துரிதமாக நடத்தப் படுகிறது.

இந்த சுனாமி அலைகள் 5 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அலையின் உயரம் 3 மீ வரை இருக்கும் எனவுன் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments