Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா பிரச்சினையில் மோடி அப்செட்டாக இருக்கிறார்! – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (07:53 IST)
சீனா எல்லை விவகாரத்தினால் இந்திய பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா இடையே லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. எல்லைப்பகுதியில் இந்தியா சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதை சீனா எதிர்த்து வருகிறது. அதேசமயம் சீனா இராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் எல்லையில் குவித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இருமுறை சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு சண்டை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவும் எல்லைப்பகுதியில் இராணுவத்தை பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “பிரதமர் மோடியுடன் சீனா எல்லை விவகாரம் குறித்து பேசினேன். இந்திய பிரதமர் நல்ல மனநிலையில் இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன். அவர் நல்ல மனிதர். அதிகமான மக்களை கொண்ட இரண்டு நாடுகளும் தற்போது மகிழ்ச்சியாக இல்லை” என்று கூறியுள்ளார்.

பொதுவாக எந்த நாட்டின் எல்லை பிரச்சினையாக இருந்தாலும் தாமாக முன்வந்து ஆஜராகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்திலும் சமாதானம் பேச முன்வந்துள்ளார். ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைக்க ட்ரம்ப் முயன்றபோது அதை இந்தியா தவிர்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments