Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த டிரம்ப்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (11:19 IST)
வடகொரியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடைபெறாது என்ற கிம் ஜாங் உன் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
 
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளினார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும், தடையை மீறி அவர் தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தார்.
 
தற்போது அவர் சில மாத காலங்களாக தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு சுமுகமான முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பார்க்க விருப்பம் தெரிவித்தது என பல சுமுகமான முடிவுகளை எடுத்துள்ளார்.
 
இந்த நிலையில், கிம் ஜாங் உன் வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments