Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர அவசரமாக சீனாவுக்கு ஸ்பெஷல் விமானத்தை அனுப்பிய டிரம்ப்: ஏன் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (18:12 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக ஒரு சிறப்பு விமானத்தை சீனாவிற்கு அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா என்ற வைரஸ் பயங்கரமாக தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 52 பேர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
இதனை அடுத்து அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைக்க அமெரிக்க அதிபர் முடிவு செய்துள்ளார். இதனால் சிறப்பு விமானம் ஒன்றை அவர் சீனாவுக்கு அனுப்பி அது அதில் அமெரிக்க அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைத்து விட்டதாக கூறப்படுகிறது 
 
தற்போது அவர்களுக்கு தீவிரமான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றால் மட்டுமே அமெரிக்காவுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
அமெரிக்காவை அடுத்து இன்னும் சில நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது ஹாங்காங் போராட்டம், வர்த்தகப்போர் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் சீனா, தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் தீர்க்க முடியாத தலைவலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments