Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர அவசரமாக சீனாவுக்கு ஸ்பெஷல் விமானத்தை அனுப்பிய டிரம்ப்: ஏன் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (18:12 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக ஒரு சிறப்பு விமானத்தை சீனாவிற்கு அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா என்ற வைரஸ் பயங்கரமாக தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 52 பேர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
இதனை அடுத்து அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைக்க அமெரிக்க அதிபர் முடிவு செய்துள்ளார். இதனால் சிறப்பு விமானம் ஒன்றை அவர் சீனாவுக்கு அனுப்பி அது அதில் அமெரிக்க அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைத்து விட்டதாக கூறப்படுகிறது 
 
தற்போது அவர்களுக்கு தீவிரமான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றால் மட்டுமே அமெரிக்காவுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
அமெரிக்காவை அடுத்து இன்னும் சில நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது ஹாங்காங் போராட்டம், வர்த்தகப்போர் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் சீனா, தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் தீர்க்க முடியாத தலைவலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments