Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானை தாக்க போவதில்லை: சைலண்ட் ஆன ட்ரம்ப்!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (09:51 IST)
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியதற்கு பதில் தாக்குதல் நடத்த போவதில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈராக் படைத்தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறிய ஈரான் ராக்கெட்டுகளை ஏவி ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை அழித்தது. அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த மோதல் உலக போரை ஏற்படுத்தி விடுமோ என உலக நாடுகள் கலக்கமடைந்தன. தாக்குதல் குறித்த விவரங்களை இன்று வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் பலியாகவில்லை. மீண்டும் ஈரானை தாக்க அமெரிக்கா விரும்பவில்லை. அதே சமயம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க போவதில்லை” என கூறியுள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments