Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப்-ராணி எலிசபெத் சந்திப்பு: தனிப்பட்ட சந்திப்பு என தகவல்

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (10:38 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் இரண்டாம் ராணி எலிசபெத் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். டிரம்புடன் அவரது மனைவி மெலினாவும் ராணி எலிசபெத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, 'அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரிட்டன் பயணம் அரசுமுறை பயணம் அல்ல என்றும், இது அவருடைய தனிப்பட்ட முறையிலான பயணம் என்றும், ராணி எலிசபெத்துடன் டிரம்ப் சந்தித்தது மரியாதை நிமித்தமாகவே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அதிபரின் இந்த பயணம் அரசுமுறை பயணமாக இல்லாமல் இருந்தாலும் அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ராணி எலிசபெத் அவர்களுடன் டிரம்ப் சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments