Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூறாவளியை அணுகுண்டால் தடுக்க யோசனையா??.. டிரம்ப் கேட்ட விசித்திரமான கேள்வி

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (09:23 IST)
சூறாவளிகளை அணுகுண்டுகளை பயன்படுத்தி தடுக்க முடியுமா? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டதாக ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆஃப்ரிக்க கடலோர பகுதியில் உருவாகும் சூறாவளிகள், அட்லாண்டிக் கடல் மீது நகர்ந்து வரும்போது, சூறாவளியின் மையப் பகுதியில் அணுகுண்டு வீசி தடுக்க முடியுமா? என அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளதாக அந்நாட்டின் இணையதள ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இது குறித்து டிரம்ப் தரப்பிலிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் டிரம்பிற்கு முன்பே, 1950 ல் எய்சன்ஹோவர் என்பவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது, டிரம்ப் கூறிய இதே கேள்வியை அவரும் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் சாத்தியமில்லை என பதிலளித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், அணு வெடிப்பு சூறாவளிக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், மேலும் அணுவெடிப்பால் ஏற்படும் கதிரியக்க வீழ்ச்சி சுற்றுசூழலுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments