Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பை சந்திக்க வடகொரியா அதிபர் விருப்பம்!

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (12:00 IST)
வடகொரிய அதிபரை சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவலாக உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியது. வடகொரியாவின் செயலால் மூன்றாம் உலகக் போர் ஏற்படும் என்று அச்சத்தில் இருந்தனர். அமெரிக்கா சார்ப்பில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் வடகொரியா பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற போக்கில் நடந்து கொண்டிருந்தது. அதனால் அமெரிக்க அரசு  வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து தென்கொரியா தூது குழு மற்றும் சின அதிபரின் அறிவுரையால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் டிரம்ப் வடகொரிய அதிபரை சந்திப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கிம் ஜாங் உன்னை சந்திக்க மிகவும் ஆவலுடன் உள்ளதாகவும், மேலும், வடகொரியா மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments