Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்: விஞ்ஞானி சாதனை

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2014 (13:06 IST)
ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தில் விஞ்ஞானி சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். இவர் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாடட்களாக ஈடுபட்டு வந்தார்.

இந்த முயற்சியின் படி ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார்.
தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்துள்ளன.

இந்தக் காட்சி அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மரம் அனைவரையும் கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

இது குறித்து சாம் வான் அகேன் கூறுகையில், “என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, இந்த மரத்தைக் குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும்.

கோடை காலத்தில் பல்சுவை கொண்ட பழங்களைக் கொடுக்கும், இதுபோன்ற தாவர ஆராய்ச்சியை, தான் இனி தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments