Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சூரிய கிரகணம்..! 178 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்வதால் பொதுமக்கள் ஆர்வம்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (17:56 IST)
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே விண்ணில் மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளை சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில்  பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

 மேலும் 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் கோடி புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது.  இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும் ஆனால் அமெரிக்காவின் சில பகுதிகள் மெக்சிகோ ஆகிய நாடுகளில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாடுகளில் உள்ள மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும்.

மேலும் நாசா தனது சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 34 மணி முதல் நள்ளிரவு 2/25 மணி வரை இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவில் அந்த நேரத்தில் சூரியன் இருக்காது என்பதால் இந்தியாவில் கிரகணத்தை பார்க்க முடியாது.  ஆனால் அதே நேரத்தில் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்புக்குரியது என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments