Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்று வயது தம்பியை சுட்டுக்கொன்ற ஆறு வயது சிறுவன்

மூன்று வயது தம்பியை சுட்டுக்கொன்ற ஆறு வயது சிறுவன்
, செவ்வாய், 20 அக்டோபர் 2015 (19:37 IST)
அமெரிக்காவில் மூன்று வயது தம்பியை, ஆறு வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அமெரிக்காவில் சிகாகோ நகரில் வசிக்கும் மைக்கேல் காண்டியாகோ (25) என்பவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. 
 
சம்பவத்தன்று, வீட்டில் தம்பியுடன் திருடன் போலிஸ் விளையாடியபோது, அண்ணனின் கண்ணிற்கு குளிர்சாதனப்பெட்டியின் மீது இருந்த ஒரு துப்பாக்கி கண்ணில் பட்டிருக்கிறது. அதை எடுத்த தம்பியை சுட்டுள்ளான் அந்த ஆறு வயது சிறுவன். துப்பாக்கியிலிருந்து கிளம்பிய தோட்டாக்கள் மூன்று வயது சிறுவனைன் தலையில் பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்தான்.
 
போலிஸ் விசாராணையில், சில நாட்களுக்கு முன்புதான் மைக்கேல், அந்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வாங்கியதாகவும், அதை தன் குழந்தையிடம் காட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
 
துப்பாக்கியை கவனக்குறைவாக கையாண்ட குற்றத்திற்காக போலிசார் அவரை கைது செய்திருக்கிறது. கைதான மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அது,
 
“துப்பாக்கியை தயவு செய்து வீட்டிற்குள் வைக்காதீர்கள்”.

Share this Story:

Follow Webdunia tamil