Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி நிலநடுக்கத்திற்கு நடுவே திருட்டு சம்பவங்கள்! – 48 பேர் கைது!

துருக்கி நிலநடுக்கத்திற்கு நடுவே திருட்டு சம்பவங்கள்! – 48 பேர் கைது!
Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (08:58 IST)
துருக்கி நாட்டில் நிலநடுக்கத்தால் பலர் இறந்துள்ள நிலையில் அதற்கு நடுவேயும் கூட திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் பல இடிந்து விழுந்ததுடன் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக துருக்கி, சிரியா மீட்பு படைகளுடன் பல வெளிநாட்டு மீட்பு குழுவினரும் களம் இறங்கியுள்ளனர்.

எனினும் நாளுக்கு நாள் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை துருக்கி, சிரியா இரு நாடுகளில் சேர்த்து நிலநடுக்கத்தால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாத கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் ஹதே பகுதியில் ஆஸ்திரியா, ஜெர்மனி நாட்டு படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு குழு மோதல்கள் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாதுகாப்பு குறைவு நிலவுவதால் ஆஸ்திரியா ராணுவம் மீட்பு நடவடிக்கைகளை அப்பகுதியில் மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments