Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறையில் ஆசிரியரை கொன்ற மாணவன்...வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (21:39 IST)
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கத்தோலிக்க உயர் நிலைப் பள்ளியில், பள்ளி ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் ஜீன் டி லுஸ் என்ற கடற்கரை நகரில் அமைந்துள்ளது கத்தோலிக்க உயர் நிலைப் பள்ளி.

இப்பள்ளியில், பல நூறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, பணியாற்றி வரும் ஆசிரியர் ஆக்னஸ் லாஸ்லே(50).

இவர் இன்று வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அவரை 16 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதில், ரத்த வெள்ளத்தில் ஆசிரியர் அங்கேயே சரிந்து உயிரிழந்தார். அந்த மாணவன் அருகிலுள்ள வகுப்பு ஆசிரியரிம் இதுபற்றிக் கூறி அந்தக் கத்தியைக் கொடுத்திருக்கிறான்.
இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உயிரிழந்த ஆசிரியரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த மாணவனை கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அதற்கு, அந்த மாணவன், தனக்குப் பேய் பிடித்துள்ளதால், இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளான்.

இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments