Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மார்க்கெட்டில் வித்தியாசமான தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்: 3 பேர் பலி

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (05:06 IST)
சிரியாவில் ரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் நேற்று நள்ளிரவில் சுவீடன் நாட்டில் தீவிரவாதிகளின் அட்டகாச தாக்குதல் காரணமாக சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானதாகவும், இன்னும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.



 



சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டுகளுடன் கூடிய டிரக்கை மிக வேகமாக ஓட்டிவந்து மோதியுள்ளார். இதனால் டிரக்கில் இருந்த குண்டுகள் பயங்கரமாக வெடித்ததில்  3 பேர் உயிரிழந்தனர்

குண்டுவெடித்த சத்தம் கேட்டு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்து ஓடியதால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே ஒருசிலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் சுவீடனில் நிகழ்ந்த முதல் பெரிய தாக்குதலாக கருதப்படுகிறாது. இந்த தாக்குதலை  வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அந்நாட்டின் பிரதமர் லோஃப்வன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments