Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிகிராம் சிஇஓவுக்கு நிபந்தனை ஜாமீன்.. பிரான்ஸைவிட்டு வெளியேற தடை!

Mahendran
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (12:59 IST)
டெலிகிராம் சிஇஓ சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணைக்கு பின் பாவெல் துரோவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஜாமின் தொகையாக நீதிமன்றத்தில் ஐந்து மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டை விட்டு அவர் வெளியேறக்கூடாது என்றும் மாறும் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது/ இந்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
முன்னதாக சட்ட விரோத செயல்களுக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் டெலிகிராம் செயலி துணை போவதாகவும் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கைக்கு கண்டனங்களும் குவிந்து வந்தன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments