Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகை சரிசெய்ய கடலில் குதித்த இந்திய இளைஞர்! – அமெரிக்காவில் சோகம்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (17:16 IST)
அமெரிக்காவில் படகு சவாரி சென்ற இந்திய இளைஞர் படகை சரி செய்ய கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வெமுலவாடா பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார். ஐதராபாத்தில் பி.டெக் படித்த இவர் எம்.டெக் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் மேற்கு ப்ளோரிடா பகுதியில் வசித்து வந்த அவர் அங்குள்ள கிராப் தீவுக்கு நண்பர்களுடன் படகில் சென்றுள்ளார்.

அப்போது படகு பழுதானதால் அவரும் அவரது நண்பர்களும் கடலில் குதித்து சரி செய்ய முயன்றுள்ளனர். ஆனால் கடலில் அலை வேகமாக வீசியதால் அவர்கள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். அவ்வழியாக வந்த ஷெரீப் அலுவலக படகு அவர்களில் 4 பேரை மீட்டுள்ளது.

கடலில் பெரிய அளவில் அலைகள் வீசியதால் யஷ்வந்த் கடலில் இழுத்து செல்லப்பட்டார். கடலோர காவல் படையினர் பல மணி நேரம் தேடிய பின் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments