நாட்டை பிடிச்சாலும் ஆயுதங்கள் மிச்சமிருக்கு..! – தலீபான்கள் வீடியோவை கண்டு அதிர்ந்த நாடுகள்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (16:53 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தங்களிடமுள்ள ஆயுதங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஆப்கன் ராணுவத்தை வீழ்த்தி தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். தலீபான்கள் நாட்டை பிடித்த நிலையில் சீனா, ரஷ்யா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் தலீபான்கள் தலைமையிலான ஆப்கன் ஆட்சிக்கு பரிந்துரைப்பது குறித்து உலக நாடுகள், ஐ.நா சபை தீவிர ஆலோசனையில் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தங்களிடம் உள்ள ஆயுத இருப்பை காட்டும் வகையில் தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் சாரை சாரையாக துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதோடு, பெட்டி பெட்டியாக கையெறி குண்டுகள், பஸூக்கா போன்ற ராக்கெட் லாஞ்சர்களையும் வைத்துள்ளனர். இவ்வளவு ஆயுதங்கள் தலீபான்களிடம் இருப்பது அண்டை நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments