3 பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றிய ஆப்கன்.. 12 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை..!

Siva
ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (12:07 IST)
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தததில், தலிபான் படைகள் பல பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களில் மோதல் தீவிரம் அடைந்தது.
 
பாகிஸ்தானின் வான்வெளி மீறலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இனாயத்துல்லா கோவாரஸ்மி தெரிவித்தார். 
 
பாகிஸ்தான் தரப்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து "முன்னறிவிப்பு இல்லாத" துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்தச் சண்டையில் குறைந்தது 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ராணுவத்தின் சாவடிகள் மற்றும் தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments