Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்: கொட்டும் மழையில் தைவான் நாட்டில் தமிழர்கள் போராட்டம்!

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:22 IST)
நேற்று தைவானில் வாழும் தமிழக மக்கள் கொட்டும் மழையில் ஒன்றாக சேர்ந்து காவிரி, ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக போராட்டம் நடத்தினர்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், நேற்று தைவான் நாட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, அங்குள்ள தேசிய பல்கலைக்கழகத்தில், கொட்டும் மழையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டம் தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் தலைமையில் நடந்தது. போராட்டத்தில் பதாகைகளை ஏந்தி தைவானில் வாழும் தமிழ் மக்கள் விவாசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments