Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (20:00 IST)
சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனா, அந்நாட்டின் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்தார். இதனையடுத்து வரும் ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இலங்கை உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு, நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளையே நாடாளுமன்றத்தை கூட்டினாலும், பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் இலங்கை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து, ராஜபக்சே அணியினர் வரும் 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments