Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:46 IST)
பாகிஸ்தானில் அரசு அலுவலகம் அருகே நடைபெற்ற  தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாவட்டமான கைபரில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அங்கு உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் நுழைய முயன்ற ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் தாலிபான் அல்லது ஐ.எஸ் அமைப்புக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 6 பேரில் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments