Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:46 IST)
பாகிஸ்தானில் அரசு அலுவலகம் அருகே நடைபெற்ற  தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாவட்டமான கைபரில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அங்கு உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் நுழைய முயன்ற ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் தாலிபான் அல்லது ஐ.எஸ் அமைப்புக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 6 பேரில் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil