Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு நாட்டில் திடீர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:41 IST)
பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 36 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் பெருவின் தெற்கு பகுதியில் உள்ள அரேகிபாவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவிலிருந்து தப்பிக்க சிலர் வேனில் ஏறி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் வேன் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments