Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு நாட்டில் திடீர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:41 IST)
பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 36 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் பெருவின் தெற்கு பகுதியில் உள்ள அரேகிபாவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவிலிருந்து தப்பிக்க சிலர் வேனில் ஏறி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் வேன் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments