Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு நாட்டில் திடீர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:41 IST)
பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 36 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் பெருவின் தெற்கு பகுதியில் உள்ள அரேகிபாவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவிலிருந்து தப்பிக்க சிலர் வேனில் ஏறி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் வேன் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments