Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெடித்தது எரிமலை: மக்கள் பீதி

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:36 IST)
இத்தாலியில் ஸ்ட்ராம்போலி எரிமலை இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக வெடித்துள்ளது.

இத்தாலி நாட்டில் தைரேனியன் கடல் பகுதியில் உள்ளது ஸ்ட்ராம்போலி தீவு. இத்தீவில் ஸ்ட்ராம்போலி எரிமலை உள்ளது. கடந்த புதன்கிழமை இந்த எரிமலை வெடித்து அதிக அலவிலான எரிமலை குழம்பை வெளியேற்றியது.

இதில் ஒருவர் பலியானார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று வெடித்துள்ளது. இரவு சுமார் 9 மணியளவில் மிகப்பெரிய சத்ததுடன் எரிமலை வெடித்து குழம்பை கக்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து இத்தாலி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கையில் , ஸ்ட்ராம்போலி தீவில் நிலைமை கட்டுபாட்டில் உள்ளது, இதில் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை” என கூறினர்.

2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை, தற்போது வெடித்து ஏற்படுத்திய தக்கமே மிக அதிகமானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments