Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை கொடூரமாக கொடுமைப்படுத்திய சித்தி

சிறுமியை கொடூரமாக கொடுமைப்படுத்திய சித்தி

சிறுமியை கொடூரமாக கொடுமைப்படுத்திய சித்தி
, ஞாயிறு, 31 ஜூலை 2016 (17:12 IST)
12 வயது மகளை ஒன்றரை ஆண்டு காலமாக கொடுமைப்படுத்திய சித்தி தற்போது நீதிமன்ற பிடியில் இருக்கிறார்.


 


அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி ராஜேஷ் ரனாத். இவரது இரண்டாவது மனைவி, சீத்தல். இந்தப் பெண், தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகள் மாயாவை பட்டினி போட்டு சித்ரவதை செய்துள்ளார். ஒரு முறை அந்த சிறுமியை அவர் செருப்பு அணிந்த காலால் முகத்தில் எட்டி உதைத்து காயப்படுத்தி உள்ளார். இரண்டாவது முறை தடியால் கன்னத்தில் தாக்கி உள்ளார். அதில் அந்த சிறுமியின் இடது புற கன்னம் வீங்கியது. மூன்றாவது முறை சிறுமியை துடைப்பத்தின் கைப்பிடியால் தாக்கி இருக்கிறார். இதில் சிறுமியின் இடது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது.

இப்படி ஒன்றரை ஆண்டு காலமாக அந்த சிறுமியை சித்தி சீத்தல் சித்ரவதை செய்துள்ளார். அவரது கணவர் ராஜேஷ், இதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது சட்டத்தின்பிடியில் சீத்தல் மாட்டிக்கொண்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 25 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதிரியார் கடத்தி கழுத்து அறுத்து கொலை