Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எரியும் இலங்கை; 7 பேர் பலி! – 231 பேர் மருத்துவமனையில்..!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (11:29 IST)
இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசின் மெத்தனத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் மக்கள் கடந்த சில காலமாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முதலாக ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆளும் கட்சி எம்.பியை கொன்றதுடன், ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதலாக இலங்கையில் நடந்து வரும் கலவரத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 231 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்ச பதவி விலகியபோதும், அதிபர் கோத்தபயவை பதவி விலக கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

குளியலறையில் இருந்த 35 பாம்பு குட்டிகள்.! அலறிய வீட்டின் உரிமையாளர்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments