Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் உணவு பஞ்சம்?? பள்ளி, அலுவலகங்கள் மூடல்!

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:39 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் பள்ளி, அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் சமீபத்தில் இலங்கையில் போராட்டம் வெடித்தது. அரசியல்வாதிகள் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கெ பதவியேற்றுள்ளார். எனினும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. 

இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. மக்கள் பலர் எரிபொருளுக்காக வரிசையில் வாகனங்களோடு காத்திருக்க தொடங்கியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கையில் பள்ளி, அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் உணவு பஞ்சம் ஏற்படும் ஆபத்து எழுந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ தெரிவித்துள்ளார். இதனால் 40 முதல் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கையில் தரிசாக உள்ள 1,500க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படாமல் தடுக்கலாம் என கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ, இந்த திட்டத்தில் ராணுவத்தை ஈடுபடுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments