Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

Siva
வெள்ளி, 15 நவம்பர் 2024 (07:55 IST)
நேற்று இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் அதிபர் அனுர குமாரா திசநாயகா கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபராக அனுர குமாரா திசநாயகா பதவியேற்ற நிலையில், தற்போது இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவிய நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கும் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேவின் கூட்டணிக்கும் இடையே தான் முக்கிய போட்டி என்று கூறப்பட்டது. 8000 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் 225 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் நேற்று இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று அதிகாலை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் அனுர குமார திஸாநாயக்க கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் ஆளும் கட்சி முன்னிலையில் இருப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி பின்னணியில் இருப்பதாகவும் முதல் கட்ட முடிவுகள் தெரிவித்துள்ளன. இன்று மாலையே மொத்த முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments