Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது: அதிபரின் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (18:43 IST)
வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது: அதிபரின் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி
சீனா, இத்தாலியை அடுத்து ஸ்பெயின் நாட்டில் மிக அதிகமாக தற்போது கொரோனா வைரஸ் பரவி கொண்டு வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியேறக்கூடாது என அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் ஸ்பெயின் பிரதமரின் மனைவி கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளது உறுதியாகியுள்ளதை அடுத்து அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலைக்குச் செல்வதற்கும் உணவு மற்றும் மருத்துவ காரணங்களுக்கும் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், தேவை இல்லாத வகையில் வெளியே வந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
 
மேலும் 15 நாள் மருத்துவ அவசர நிலை விதிக்கப்படுவதாகவும் ஸ்பெயின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் பிரதமரின் மனைவியே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஸ்பெயின் பிரதமரின் மனைவியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments