முதன்முறையாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:19 IST)
கொரோனா காரணமாக முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காரைக்குடி – திருவாரூர் வழிதடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்பு முன்பதிவு செய்து பயணிக்கும் சிறப்பு ரயில்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரைக்குடி – திருவாரூர் வழிதடத்தில் ரயில் சேவை இயக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் முன்பதிவில்லா பாசஞ்சர் ரயில் சேவையை இவ்வழி தடத்தில் தொடங்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த மற்ற வார நாட்களில் திருவாரூரில் மதியம் 2.15க்கும், காரைக்குடியில் 2.30க்கும் இந்த ரயில் சேவை புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments