Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து; 7 பேர் உடல் கருகி பலி! – தென்கொரியாவில் சோகம்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (08:33 IST)
தென்கொரியாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து சற்று தொலைவில் உள்ள நகரம் டேஜியோன். அங்கு பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று ஷாப்பிங் மாலில் கார் நிறுத்தும் அடித்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து கட்டிடங்களில் இருந்த மக்களும் வெளியேற்றப்பட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் அடிதளத்தில் பணியாற்றி வந்த 7 ஊழியர்கள் உடல்கருகி பலியாகியுள்ளனர். தீ விபத்து நடந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் ஷாப்பிங் மாலில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments