Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியாவில் வேகமாகப் பரவிவரும் மெர்ஸ் நோய்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2015 (13:47 IST)
தென் கொரியாவில் மெர்ஸ் வைரஸ் வேகமாகப் பரவிவருகின்றது, அந்நாட்டில் மெர்ஸ் நோய்க்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 154 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தென்கொரியாவில் ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அங்கு, தொடர்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
 
சிபோல் நகரில் உள்ள சாம்சங் மருத்துவ மைய மருத்துவமனையில் புதிதாக மெர்ஸ் நோய் தாக்கிய 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சாம்சங் மருத்துவமனையில்தான் மெர்ஸ் நோய் தாக்கிய ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் 400 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மருத்துவ ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை அந்நாட்டில் 154 பேர் "மெர்ஸ்" நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments