நாயென்று நினைத்து கரடியை வளர்த்த பாடகி:வனவிலங்குத் துறையினரால் கைது

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (19:01 IST)
மலேசியாவைச் சேர்ந்த பாடகி ஒருவர், நாய் என நினைத்து கரடியை வளர்த்ததால் வனவிலங்கு துறையினர் அவரை கைது செய்து உள்ளனர்.

மலேசியா நாட்டின் பிரபலமான பாடகி ஸரித் ஸோஃபியா. இவர் ஒரு கரடியை செல்லப்பிராணியாக வளர்த்துள்ளார்.

ஒரு நாள் அந்த கரடி ஸரித் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளது. அதை கண்ட ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பரவலாக வைரலானதால் வனவிலங்குத் துறை  அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. பின்பு உடனடியாக பாடகி ஸரித்தை கைது செய்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் ஸரித்திடம் கேட்டபோது, இரவில் ஒரு நாள் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, சாலையோரம் ஏதொ குட்டி ஒன்று தவித்துகொண்டிருந்ததாகவும், பார்ப்பதற்கு நாய் குட்டி போல் இருந்ததால் நாய் என்றே நினைத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

பாடகி ஸரித் வளர்த்த கரடி ஜன்னல் வழியே எட்டிபார்த்த வீடியோ,சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments