Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (12:07 IST)
சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழரான தங்கராஜ் சுப்பையா என்ற 46 வயது நபர் இன்று காலை தூக்கில் இடப்பட்டார். அவர் ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மரண தண்டனை நிறைவேற்ற ஐநா மனித உரிமை அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இன்று காலை சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது

தங்கராஜ் சுப்பையா இன்று காலை தூக்கில் இடப்பட்டார் என சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சிங்கப்பூரின் கொள்கை சிங்கப்பூர் மக்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்டது என்று இந்த தூக்கு தண்டனை குறித்து சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments