Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட சிங்கப்பூர் பிரதமர்: மோடி செய்வாரா?

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (18:21 IST)
மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட சிங்கப்பூர் பிரதமர்:
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மனித இனத்தையே அச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டு பிடித்துள்ள நிலையில் பல நாடுகள் தடுப்பு ஊசியை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் முதல் நபராக கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள், பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். கொரோனா தடுப்பூசி நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்றும் அதனால் தயவு செய்து அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை தான் போட்டுக் கொண்டால் தான் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் என்ற வகையில் அவர் இதனை செய்துள்ளார். இதேபோல் இந்திய பிரதமர் மோடி அவர்களும் மக்கள் முன்னிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்கள் முன்னிலையில் போட்டுக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments