Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் காரில் சென்றபடி துப்பாக்கிச்சூடு

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (22:29 IST)
செர்பியா நாட்டின்  துபோனா என்ற பகுதியில் ஓடும் காரில்  துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில்,8 பேர் பலியாகினர்.

செர்பியா நாட்டின் தலைநகர் பெகிரேடில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ள துபோனா என்ற பகுதியில்   நேற்றிரவு ஓடும் காரில் இருந்த ஒரு நபர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டான்.

இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர்,  14 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீஸர் விசாரித்து வந்த நிலையில், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி, கிராகுஜேவாக் நகரில் அருகேயுள்ள பகுதியில் கொலையாளியை போலீஸர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments