Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்காவில் இந்தியர் கைது

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (11:03 IST)
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நபர் விமானத்தில் தன்னுடன் பயணித்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி என்பவர் அமெரிக்காவில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராமமூர்த்தி லாஸ்வேகாசிலிருந்து டெட்ராய்டுக்கு விமானத்தில் பயணித்தபோது தன்னுடன் பயணித்த 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார்.
 
இதையடுத்து ராமமூர்த்தி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார். ராமமூர்த்தி தன்மீதான புகாரை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் நான் மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன் அதனால் என்ன நடந்தது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்