Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடல் மட்டம் உயர்வு : அறிஞர்கள் எச்சரிக்கை

2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடல் மட்டம் உயர்வு : அறிஞர்கள் எச்சரிக்கை
, செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (13:45 IST)
உலகின் பல ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


 
 
கடல் மட்டம் குறித்த ஆய்வை நடத்தி வரும், அமெரிக்காவின் புவி அறிவியல் ஆராய்ச்சிதுறையில் பணியாற்றும் ராபர்ட் கூப், கார்லிங் ஹே, எரி மாரோ மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜெர்ரி மிட்ரோவிகா ஆகியோர் சமீபத்தில் அவர்கள் ஆய்வை சமர்பித்தனர்.
 
அந்த ஆய்வில் “கடந்த 2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில்  கடல் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 1900 முதல் 2000 ஆண்டு வரை 14 செ.மீ, அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கு மனிதர்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதலே காரணம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இப்படியே சென்றால், அது பேரழிவில் முடியும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அதேசமயம் பூமி 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்போது கடல் மட்டம் 1000 முதல் 1400 இன்ச் வரை குறைகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil